கேப்டன் – விமர்சனம்

டெடி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சக்தி சௌந்தரராஜன் மற்றும் ஆர்யா கூட்டணியில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ள திரைப்படம் கேப்டன். எப்போதும் வித்யாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் சக்தி சௌந்தரராஜன் இம்முறையும் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் எடுத்திராத க்ரியேச்சர் படத்தை இயக்கியுள்ளார்.

சக்தி சௌந்தரராஜனின் வித்யாசமான முயற்சி, ஆர்யா நடிப்பு, முதல் க்ரியேச்சர் படம் என கேப்டன் படத்தின் மீது மாபெரும் அளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அத்தகைய எதிர்பார்ப்பை கேப்டன் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..

கதைக்களம்
பல பாதுகாப்புடன் எங்கு ஒளித்திருந்தாலும், அவன் எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் தன்னுடைய டீம் மூலம் திறன்பட செயலப்பட்டு எதிரியை வீழ்த்துகிறார் ஆர்யா { வெற்றிச்செல்வன் }. ஆர்யாவின் தலைமையில் செயல்படும் இந்த தலைசிறந்த டீமில் ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ், காவ்யா ஷெட்டி ஆகியோர் உள்ளனர்.

பல சவால்களை எதிர்கொண்ட இந்த டீமிடம் ஒப்படைக்கப்படும் மிஷின் தான் செக்டர் 42. மினரல் தொழிற்சாலை காரணமாக பல வருடங்களாக மூடப்பட்டு, மனித நடமாட்டம் இல்லாமல் இருக்கும் செக்டர் 42 இடத்தை மீண்டும் இயக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதனை முறையாக கவனித்து No Objection Certificate தரும்படி இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் ஆர்யாவின் டீம் உள்ளே செல்வதற்கு முன் மற்றொரு கேப்டன் தலைமையில் ஐவர் கொண்ட டீம் செக்டர் 42 உள்ளே சென்றது. ஆனால், திரும்ப வரவில்லை. அவர்கள் மட்டுமின்றி செக்டர் 42 உள்ளே சென்ற பல நபர்கள் மீண்டும் திரும்ப வரவில்லை என்று ரெக்கார்ட்ஸ் உள்ளது. இதனால், இந்த சவாலான காரியத்தை துணிச்சலுடன் ஏற்றுக்கொள்ளும் ஆர்யா தனது டீமுடன் முதல் முறையாக உள்ளே செல்கிறார்.

செக்டர் 42 உள்ளே செல்லும் ஆர்யாவையும் அவரது டீமையும் வினோதமான க்ரியேச்சர் ஒன்று தாக்குகிறது. இதன்பின் ஆர்யாவின் டீமுக்கு என்ன நடந்தது? ஆர்யாவின் கண்ணில் பட்டது என்ன? அதை எப்படி தனது டீமுடன் எதிர்கொண்டார்? கடைசியில் உண்மையில் செக்டர் 42வில் நடந்தது என்ன? என்பதே கேப்டன் படத்தின் மீதி கதை..  

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!