எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி படத்தின் இரண்டாம் பாகம்.. ஜெயம் ரவியே கூறிய தகவல்

எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நதியா, அசின், பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் ஜெயம் ரவியின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பதையும் வெற்றியையும் கொடுத்தது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு, தனது திரைவாழ்க்கை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார்.
இரண்டாம் பாகம்

அதில் ஒன்றாக எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி படத்தின் இரண்டாம் பாகம் கதை உருவாகி வருகிறது. அண்ணன் மோகன் ராஜா கதையை தயார் செய்துருக்கிறார். என சூப்பர் தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார் ஜெயம் ரவி.


இதன்முலம் எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பார்ட் 2 உருவாவதை நடிகர் ஜெயம் ரவி உறுதி செய்துள்ளார். இதுமட்டுமின்றி தனி ஒரு பார்ட் 2 படத்திற்காக தேவையான விஷயங்களும் தயார் என்றும், விரைவில் அப்படம் துவங்கும் என்றும் கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!