நாக சைத்தன்யா இரண்டாவது திருமணம் குறித்து வந்த தகவல்- கோபமாக சமந்தா போட்ட பதிவு

நடிகை சமந்தா உழைத்தால் தங்களது கனவை நிச்சயம் எட்டி முடியும் என்று காட்டி வருபவர். வெறும் ரூ. 500 முதன் முதலாக சம்பளம் பெற்ற இவர் இப்போது தனது உழைப்பின் மூலம் உயர்ந்து கோடியில் சம்பளம் வாங்குகிறார். 

பலருக்கும் சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவும் இருக்கிறார்.
சினிமா வாழ்க்கை இவருக்கு பெரிய அளவில் புகழையும், மகிழ்ச்சியையும், உயரத்தையும கொடுத்து வருகிறது. ஆனால் திருமண வாழ்க்கை சமந்தாவிற்கு நல்லதாக அமையவில்லை.

2017ம் ஆண்டு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்த 2021ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அவர்கள் சொன்ன இந்த விஷயத்தை கேட்டதும் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள்.

நாக சைத்தன்யா புதிய காதல்
இந்த நேரத்தில் நாக சைத்தன்யா நடிகை சோபிதா என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் என செய்திகள் வந்தன. ஆனால் நாக சைத்தன்யா ரசிகர்கள் இது சமந்தா குழு செய்த வேலை என பதிவு போட அதற்கு சமந்தா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், பெண்ணை பற்றி விஷயம் என்றால் அது உண்மை, ஆண் பற்றி வந்தால் அந்த பெண் தான் இப்படி ஒரு தகவல் பரப்புகிறார் என்பதா, கொஞ்சம் வளருங்கள். இதில் சம்பந்தப்பட்ட இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

உங்களது வேலையை கவனியுங்கள், குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என பதிவு செய்துள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!