கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்..

விக்ரம் படத்தின் கதைச்சுருக்கம்

உலகநாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இணைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்துள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

அதுமட்டுமின்றி யாரும் எதிர்பார்த்திராத வகையில் இதில் நடிகர் சூர்யாவும் நடித்திருப்பதை உறுதி செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்கள் ஒன்றாக நடித்திருப்பதால் திரையில் அவர்களை காண ரசிகர்கள் அனைவரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றார்கள்.

இந்நிலையில் ஆக்ஷன் என்டேர்டைன்ர் திரைப்படமான விக்ரம் படத்தின் கதைச்சுருக்கம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் “அதிவேக ஆக்ஷன் படமான விக்ரமில், தொடர்ந்து நடந்து வரும் தொடர் கொலைகளை விசாரிக்க நியமிக்க படுகிறார் அமர். அவரின் விசாரணையில் இது சாதாரண விஷயமில்லை என்பது மேலும் அதுவே பெரிய கேங் வார்-க்கு காரணமாகவும் அமைகிறது” என கதைச்சுருக்கத்தில் உள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!