யுத்த சத்தம் – விமர்சனம்

நடிகர் கௌதம் கார்த்திக்
நடிகை சாய் பிரியா
இயக்குனர் எழில்
இசை இமான்
ஓளிப்பதிவு குரு தேவ்

சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் வாசலில் ஒரு இளம் பெண் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை நடந்ததிற்கான காரணத்தை கண்டுபிடிக்க பார்த்திபன் களமிறங்குகிறார். நீண்ட தேடுதலுக்கு பிறகு அந்தப் பெண்ணின் காதலனான கவுதம் கார்த்திக் மீது அவருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. 

இறுதியில் கொலை நடந்ததிற்கான காரணம் என்ன? கொலையை செய்தது யார்? கொலைக்குக் காரணமானவர்களை பார்த்திபன் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக வரும் பார்த்திபனின் நடிப்பு எதார்த்தமாக இருந்தாலும், வசனங்களில் சற்று வெறுப்பு தன்மை ஏற்படும் அளவிற்கு உள்ளது. போலீசாக வரும் பார்த்திபன் முகத்தில் தாடியுடன் இருப்பதால் படம் பார்ப்பவர்களுக்கு அந்த கதாப்பாத்திரம் போலீசாக உணரும் படி இல்லை. 

இரண்டாம் கதாநாயகனாக வரும் கவுதம் கார்த்திக்கு இப்படத்தில் அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் நடிப்பு சிறப்பாகவே உள்ளது. கவுதம் கார்த்திக் ஜோடியாக சாய் பிரியா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை சுவாரசியம் குறைவாக எடுத்திருக்கிறார் இயக்குனர் எழில். இவர் இதற்குமுன் இயக்கிய படங்களில் இருந்து விலகி இப்படத்தை இயக்கியிருப்பதால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அடைந்திருக்கிறது. திரில்லர் படங்களுக்கு ஏற்ற விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இப்படத்தில் இல்லை. 


இமான் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் தன் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.


மொத்தத்தில் ‘யுத்த சத்தம்’ மவுனம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!