ஷங்கரின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் ! யார் தெரியுமா?

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் பிரமாண்டமாக இயக்குனராக திகழ்ந்து வருபவர். இவரின் இயக்கத்தில் கடைசியாக 2.0 திரைப்படம் வெளியானது.

அப்படத்தை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்ற இயக்குனர் ஷங்கர் ராம் சரணின் ‘RC 15’ இயக்கி வருகிறார், பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. 
இதனிடையே தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி RC15 படத்தில் முக்கிய நடிகரான SJ சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கு முன் SJ சூர்யாமகேஷ் பாபுவிற்கு வில்லனாக ஸ்பைடர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!