காதல் மயக்கத்தில் பாவ்னியுடன் அப்படி செய்தேன்- அமீர் ஓபன் டாக்

பிக்பாஸ் 5வது சீசனில் பங்குபெற்ற பல போட்டியாளர்களின் சொந்த விஷயம் மக்களை கண்ணீர் வர வைத்தது. அப்படி நமீதா மாரிமுத்து, பாவ்னி, அமீர் போன்றவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார்கள் என்பது தெரிய வந்தது.

அமீர் நிகழ்ச்சியின் இடையில் தான் போட்டிக்குள் வந்தார் எனவே அவர் தனது பயணம் குறித்து தனியாக தான் பேசியிருந்தார். பின்பு அமீர்-பாவ்னி காதல் குறித்து நிறைய கிசுகிசுக்கப்பட்டது.

அமீர்-பாவ்னிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் மக்களிடம் சர்ச்சையாக பேசப்பட்டது.

தற்போது முதன்முறையாக முத்தம் கொடுத்த விஷயம் குறித்து அமீர் பேசியுள்ளார். அதில் அவர், நான் பாவ்னிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கவில்லை, அப்படி கொடுத்திருந்தால் தான் பிரச்சனை ஆகி இருக்கும்.

அவர் தடுக்கவே இல்லை, அவருக்கு தெரிந்துதான் கொடுத்தேன். அப்போது இருந்த காதல் உணர்வில் கொடுத்துவிட்டேன், அதை எதற்கு பெரிதாக்குகிறீர்கள், சர்ச்சையாக்குறீங்கள், நாங்கள் இப்போது வரைக்கும் நல்ல நண்பர்களாக உள்ளோம் என கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!