ஆச்சார்யா ரவி மறைவிற்கு அழ்ந்த இரங்கல்… விஜய் பட இயக்குனர் ரவி அறிக்கை

நடிகர் விஜய்யை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி, ஆச்சார்யா ரவி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

’சேது’ திரைப்படத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவி, விக்னேஷ் நடிப்பில் வெளியான ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் ஆச்சார்யா ரவி என்று அறியப்பட்டார். இவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 

இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். அதே சமயம், விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி இவர்தான் என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து ஷாஜகான் பட இயக்குனர் ரவி காலமானார் என்றும் செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவியது.

இந்நிலையில், ஷாஜகான் பட இயக்குனர் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம், நான் விஜய் சாரை வைத்து ’ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி. நண்பர் ஆச்சார்யா பட இயக்குனர் ரவி மரணம் அறிந்து அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!