எகிறும் புஷ்பா வசூல்.. நான்கு நாளில் இத்தனை கோடியா? லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபிஸ்

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து பிரம்மாண்ட வசூல் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் மூன்று நாட்களில் 173 கோடி ருபாய் பெற்று இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது நான்காம் நாள் வசூலோடு சேர்ந்து மொத்த வசூல் 190 கோடியை தொட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இன்று 200 கோடி என்ற மைல்கல்லை புஷ்பா கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஹிந்தியில் புஷ்பா படத்தின் நான்காம் நாள் வசூல் முதல் இரண்டு நாட்களை விட அதிகரித்து இருக்கிறது. இது படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருவதை காட்டுவதாக பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

புஷ்பா ஹிந்தி வசூல் விவரம் இதோ..
முதல் நாள் – ₹ 3.11 Cr.
இரண்டாம் நாள் – ₹ 3.44 Cr.
மூன்றாம் நாள் – ₹ 5.18 Cr.
நான்காம் நாள் – ₹ 4.25 Cr   

மேலும் தமிழில் புஷ்பா நான்காம் நாளிலேயே போட்ட முதலீடை திரும்ப எடுத்து லாபக்கணக்கை தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!