நிர்வாண வீடியோ வெளியானதும் வெளியே தலைகாட்ட முடியவில்லை – ராதிகா ஆப்தே

ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா படத்தில் ஏமாற்றப்பட்டேன் என்று பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே பேட்டி அளித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி மற்றும் வெற்றிச்செல்வன், தோனி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார். பார்ச்சட் என்ற இந்தி படத்தில் பாலியல் தொழிலாளியாக வந்தார்.

ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து ராதிகா ஆப்தே தற்போது அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, “நிர்வாண வீடியோ வெளியானதும் நான்கு நாட்கள் வெளியே தலைகாட்ட முடியவில்லை. எனது கார் டிரைவர், வீட்டு வேலை செய்பவர்கள், உறவினர்கள் யாரேனும் அந்த வீடியோவை பார்த்து இருப்பார்களோ என்ற அச்சத்தினால் மனம் புழுங்கி இருந்தேன்.

அந்த வீடியோவை வைத்து சமூக வலைத்தளத்தில் என்னை கேவலமாக அவதூறும், கேலியும் செய்ததை தாங்க முடியவில்லை. அதையெல்லாம் கடந்து தொடர்ந்து நடித்து வருகிறேன்.

ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா படத்தில் ஏமாற்றப்பட்டேன். எதிர்பார்த்த சம்பளம் தரவில்லை. படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில் தொடங்காமல் எனது நேரத்தையும், திறமையையும் விரயமாக்கினர். சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமா என்றெல்லாம் யோசித்தேன். அதில் ஏற்பட்ட அனுபவம் நான் ஒதுக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் என்னை உறுதியாக இருக்க வைத்தது’’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!