இனி வில்லனாக நடிக்கப் போவதில்லை – சோனு சூட் முடிவு

பிரபல வில்லன் நடிகரான சோனு சூட், இனிமேல் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் கொடூரமான வில்லனாக நடித்து வந்தவர் சோனுசூட். கொரோனா லாக்டவுன் போடப்பட்டதில் இருந்து ஏழை மக்களுக்காக இவர் செய்த உதவிகள் ஏராளம். அந்த உதவிகள் அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்த சோனு சூட், மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக மாறினார்.

மக்கள் மத்தியில் தற்போது அவரது இமேஜ் மாறிவிட்டதால், படங்களில் அவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் கொடுப்பதை இயக்குனர்கள் தவிர்த்து வருகிறார்களாம்.

அதன்படி கொரோனா லாக்டவுனுக்கு முன் தெலுங்கில் அவர் வில்லனாக நடித்துவந்த ‘அல்லுடு அதுர்ஷ்’ என்ற படத்தில் சோனு சூட்டின் கதாபாத்திரத்தை முற்றிலும் மாற்றி விட்டார்களாம். தற்போது அவருக்காக புதிய கதையை உருவாக்கி உள்ளார்களாம்.

சோனு சூட்டும் இனி வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க போவதில்லை என முடிவெடுத்து விட்டாராம். பாசிட்டிவான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க உள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!