தீவிர சிகிச்சை பிரிவில் சின்னத்திரை நடிகை கெளசல்யா

டிவி சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை கெளசல்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிவி சீரியலில் நடித்து வருபவர் நடிகை கௌசல்யா. தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நாயகனின் பாட்டியாக நடித்து வருகிறார் கெளசல்யா.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார். 74 வயதாகும் இவர் மூச்சுத்திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவரது குடும்பத்தினர் கௌசல்யாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!