தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பாலா, அவருக்கென ஒரு தனி பாணியில் தனது படங்களை இயக்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தார்.
ஆனால் கடைசியாக நடிகர் துருவ் விக்ரமை வர்மா என்ற படத்தை இயக்கினார், முதல்முறையாக ரீமேக் படத்தை இயக்கிய பாலா கடுமையான விமர்சனங்களை சந்திந்தார்.
மேலும் மீண்டும் பாலாவின் திரைப்படங்களை காண நினைந்த ரசிகர்களுக்கு தற்போது செம விருந்து காத்து கொண்டு இருக்கிறது.
ஆம் 17 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து பாலா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுடன் அதர்வா, ஆர்யா உள்ளிட்டோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!