‘சைலன்ஸ்’ பட புரமோஷனில் ஆர்வம் காட்டாத அனுஷ்கா – காரணம் இதுவா?

‘சைலன்ஸ்’ படம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ள நிலையில், நடிகை அனுஷ்கா அப்படம் குறித்து எந்தவித பேட்டியும் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட நடிகை அனுஷ்கா, ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. தற்போது வேறு வழியின்றி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் சம்மதித்தார்.

படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற நடிகர்கள் இதில் கலந்துகொண்டு படம் பற்றி பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் அனுஷ்கா இதுவரை எந்த பேட்டியும் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

முன்னதாக தனது தரப்பில் ஒரே ஒரு வீடியோவை எடுத்துத் தருவதாகவும், அதையே அனைத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அனுஷ்கா சொல்லியிருந்தாராம். படம் ரிலீசாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அந்த வீடியோவும் இன்னும் வராததால் படக்குழு குழப்பத்தில் உள்ளார்களாம். படத்தை ஓடிடியில் வெளியிடுவது பிடிக்காமல் தான் அனுஷ்கா இப்படி செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!