ராசி இல்லாத நடிகை எனக்கூறி 8 படங்களில் இருந்து நீக்கினார்கள் – வித்யாபாலன் வேதனை

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன், ராசி இல்லாத நடிகை என்று தன்னை ஒதுக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் ஆரம்பத்தில் தமிழ், மலையாள படங்களில் நடிக்கவே வாய்ப்பு தேடினார். ஆனால் அவரை ராசியில்லாதவர் என்று ஒதுக்கி விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து வித்யாபாலன் கூறியதாவது: “நான் முதன்முதலில் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்தேன். அதில் நடித்துக்கொண்டு இருந்தபோதே எனக்கு எட்டு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் மோகன்லால் படம் பாதியிலேயே நின்று விட்டது. இதனால் என்னை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்து இருந்தவர்கள் ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினர்.

எனக்கு பதில் வேறு நடிகைகளை நடிக்க வைத்தார்கள். அதன்பிறகு தமிழில் ஒப்பந்தம் செய்த படங்களில் இருந்தும் நீக்கி விட்டனர். இதனால் மனம் உடைந்து போனேன். ஆத்திரம் வந்தது. யாரும் எனக்கு உதவவில்லை. தியானம், பிரார்த்தனை மூலம் அதில் இருந்து மீள முயன்றேன். இந்தியில் பரீனிதா படத்தில் நடித்த பிறகுதான் எனது வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்பட்டது.” இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!