ரஜினி, விஜய், அனிருத், காஜல் வரை இந்த லாக்டவுன் சமயத்தில் எப்படி சம்பாதிக்கிறார்கள் தெரியுமா? செம்ம பிசினஸ்ப்பா…!

தமிழ் சினிமா கொரொனாவால் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் பல பிரபலங்கள் பணத்திற்கு என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி உள்ளது.

ஆனாலும், அவர்களுக்கு என்ன கவலை இன்னும் இரண்டு வருடம் என்றாலும் ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு எல்லாம் கவலையில்லை என்று கூறி வருகின்றனர்.

அது ஒரு புறம் இருக்க, பல நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் சைட் பிஸினஸ் தொடங்க ஆரம்பித்துவிட்டனர்.

அனிருத் தன் நண்பர்களுடன் இணைந்து தி சம்மர் ஹவுஸ் என்ற ஹோட்டலை நடத்தி வருகின்றாராம்.

ஆர்யா நீண்ட நாட்களாகவே ஷீ ஷால் என்ற ஹோட்டலை வைத்து நடத்தி வருகிறார்.

வரலட்சுமி இந்த நாட்களில் லைப் ஆப் ஃபை என்ற சீஸ் சம்மந்தப்பட்ட ஆர்டர்களை வாங்கி ரெடி செய்து கொடுத்து வருகிறாராம்.

இதோடு காஜல் ஒரு ஜுவல்லரி ஷாப் வைத்துள்ளாராம், மேலும், ராகுல் ப்ரீத் சிங், அமலா பால் போன்ற நடிகைகள் பிட்நஸ் குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

ஐஸ்வர்யா தனுஷ் யோகா, பிட்நஸ் கிளாஸ் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் தங்களின் மண்டபம் மூலம் பணம் ஈட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு நடிகர் ராம்சரண் ரைடிங் கிளப் ஒன்றை நடத்தி வருகிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!