ராஜ்கோட்டில் அரண்மனை 3-யை தொடங்கிய சுந்தர்.சி

ஆர்யா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் ராஜ்கோட் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை திரைப்படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர்.சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.

அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் ‘அரண்மனை 3’ படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட் என்ற இடத்தில் வான்கெனர் பேலஸ் எனப்படும் பிரமாண்டமான அரண்மனையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.

இதில் ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத் குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!