அனுஷ்காவுடன் நடிக்க மறுத்த பிரபாஸ்

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், அனுஷ்காவுடன் நடிக்க மறுத்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

சாஹோ’ படத்திற்கு பிறகு ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். காதல் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இத்தாலியில் நடந்தது. பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரபாஸ் – பூஜா ஹெக்டேயின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என ராதா கிருஷ்ண குமார் டுவீட் செய்துள்ளார். மேலும், இப்படத்தில் முதலில் பிரபாசுக்கு ஜோடியாக அனுஷ்காவைத் தான் நடிக்க வைக்க திட்டமிட்டார் ராதா கிருஷ்ண குமார்.

ஆனால் பாகுபலி படங்களுக்கு பின் அவர்களை இணைத்து காதல் கிசுகிசு, திருமண வதந்திகள் பரவியதால், அனுஷ்காவிற்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்யும் படி பிரபாஸே கூறினாராம். இதையடுத்தே பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்த செய்தி இப்போது தெரிய வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!