இனி ஆக்‌ஷன் மட்டும் தான், நடிகர் சந்தானத்தின் அதிரடி முடிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் சந்தானம்.

இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்திற்கு பிறகு காமெடி கலந்த ஹீரோ கதாபாத்திரத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தில்லுக்கு துட்டு 1,2 மற்றும் எ1 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எ1 படத்தை இயக்கிய ஜான்சன் அவர்களுடன் மீண்டும் கைகோர்த்துளார் சந்தானம். இப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகளில் சந்தானம் நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!