இலங்கையில் விஜய்யின் பிகில் படம் திரையிட்ட திரையரங்கிற்கு இப்படியெல்லாம் நடந்ததா?- பூஜா ஓபன் டாக்

விஜய்யின் பிகில் படம் இந்த வருட தீபாவளிக்கு மாஸாக வெளியானது. தமிழ்நாட்டில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு, ஆந்திரா மற்றும் கேரளா, கர்நாடகா என தளபதி மாஸ் செய்துவிட்டார்.

இப்பட ரிலீஸை தொடர்ந்து தளபதி தனது அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். இப்போது பிகில் படம் குறித்து இலங்கையில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை பூஜா.

அதில் அவர், பிகில் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஜாப்னாவில் இருந்தேன். அங்கு ஒரு பிரபலமான ராஜா திரையரங்கம் இருக்கிறது.

பிகில் படத்தின் முதல் நாள் முதல் ஷோ கிடைக்கவில்லை என ரசிகர்கள் எல்லாம் திரையரங்கின் கேட்டை எல்லாம் உடைத்து அப்படி ஒரு ஆர்வமாக பார்த்தார்கள்.

அவர்கள் தளபதி மேல் வைத்திருக்கும் வெறி கண்டு அதிர்ந்துவிட்டேன் என பேசியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!