தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இதைத்தொடர்ந்து அவர் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பெருமளவில் பிரபலமானார்.
இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள். அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.
Friendship forever ❤️❤️❤️ pic.twitter.com/H8Vz1tUmiR
— YashikaAannand (@Yashikaaannandd) September 12, 2019
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின் பிக்பாஸ் இருந்து வெளியேறிய யாஷிகா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் அவர் தற்போது நட்பின் அருமையை உணர்த்தும்வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வயதான இருமுதியவர்கள் தங்களது நட்பினை ஆத்மாத்மமாக வெளிப்படுத்தியுள்ளனர். இது பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.