பிக் பாஸ் வீட்டில் இருந்து நாளை வெளியேறப்போவது இவரா..? ஆனால் என்ன நடக்கும்..?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி கொண்டே செல்கிறது.

வார இறுதியை நெருங்கும் போது இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரையுமே தொற்றி கொள்கிறது.

பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என இதுவரை நான்கு பேர் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் 5-வது எவிக்ஷன் நடைபெற உள்ளது.

இதற்கான நாமினேஷனில் சாக்ஷி அகர்வால், கவின், மதுமிதா, அபிராமி, ரேஷ்மா என ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் சாக்ஷி அகர்வால் தான் மிகவும் குறைவான ஓட்டுகள் பெற்றுள்ளார். இதனால் அவர் தான் வெளியேற்றப்பட உள்ளார்.

ஆனால் சாக்ஷி அகர்வால் முழுவதுமாக வெளியேற வாய்ப்பில்லை. அவர் சீக்ரெட் ரூமிற்கு அனுப்பட்ட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.