ஐஸ்வர்யா ராயின் காதல் லீலைகள் – முன்னாள் காதலன் வெளியிட்ட புகைப்படம்!

ஐஸ்வர்யா ராயின் காதல் லீலைகளை தொடர்புபடுத்தி 3 புகைப்படங்களை அவரது முன்னாள் காதலன் நடிகருமான விவேக் ஓபராய் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக அழகியான ஐஸ்வர்யா ராய் முதலில் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வசித்து வந்தனர். பிறகு இருவர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் சல்மான்கானை கழட்டி விட்டார். இதனைத் தொடர்ந்து அப்போது பிரபலமாக இருந்த நடிகர் விவேக் ஓபராயை ஐஸ்வர்யா ராய் காதலித்ததாக கூறப்பட்டது.

விவேக் ஓபராய் ஐஸ்வர்யா ராய் இணைந்து பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த புகைப்படங்களும் வெளியானது. ஆனால் திடீரென அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு ஐஸ்வர்யா ராய் செட்டிலாகிவிட்டார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலர் என்று கூறப்படும் விவேக் ஓபராய் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது. ஆனால் அதில் பிரச்சினை என்னவென்றால் ஐஸ்வர்யா ராயின் காதல் லீலைகளை அம்பலப்படுத்தும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது.

அதாவது வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு என்று நடிகர் சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதன் பிறகு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என்று ஐஸ்வர்யா ராய் விவேக் ஓபராயுடன் இருக்கும் புகைப்படம் உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் என்று நடிகர் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் உள்ளது.

வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு போன்றவற்றை பொய்யாக்கி தேர்தல் முடிவு வெளியாகும் என்பதை தெரியப்படுத்த ஐஸ்வர்யா ராயின் காதல் லீலைகளை விவேக் ஓபராய் பயன்படுத்தி இருப்பது தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதனை அடுத்து ஒரு பெண்ணின் மானத்தை வைத்து புகைப் படத்தை வெளியிட்டதாக விவேக் ஓபராய்க்கு பெண்கள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.