ஜூலியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்! ஓட்டு போட்டதற்காக இப்படியா?

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிகம் பிரபலமானவர் ஜூலி. இவர் அதன்பிறகு பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று இருந்த அவர் அதில் தன் பெயரை கெடுத்துக்கொண்டார்.

இதனால் அவரை இணையவாசிகல் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னரும் அவரை தொடர்ந்து தாக்கி பேசியே வருகின்றனர்.

இதன் காரணமாகவே சமூக வலைதள பக்கங்களில் அவர்களின் கமெண்டுகள் படுமோசமாக இருக்கும்.

இதனால் கோபமான ஜுலி சமீபத்தில் கூட இப்படி பேசுபவர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நான் செய்தது தவறு தான், அதற்காக இப்படியா என்று வேதனையுடன் அதில் கூறியிருந்தா. ஆனால் யாரும் வசைபாடுவதை நிறுத்துவதாக தெரியவில்லை.

நேற்று முன் தினம் நடந்த தேர்தலில் ஜூலி வாக்களித்துவிட்டு அதன் பின் டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டார்.

அதற்கும் நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். அந்த டுவிட்டிற்கு வந்த கமெண்டுகள் அனைத்தும் அவரை தகாத வார்த்தைகளில் திட்டி தான் வந்திருக்கிறது.

நீங்களே அதை பாருங்களேன்..

https://twitter.com/Oviya_Army_daw/status/1118786577973440512


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.