விஜய்யா இப்படி பேசினார்..!!! வைரலாகிய வீடியோவால் பரபரப்பு..!!!


சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகர் விஜய் கலந்துக்கொண்டார். தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் அதிக ஹிட் படங்கள் கொடுத்ததற்காக விஜய்க்கு தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிசின் சாம்ராட் எனும் விருது வழங்கப்பட்டது.

அப்போது விவசாயிகளின் அவல நிலை குறித்து அவர் கூறிய கருத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுகுறித்து வெளியான மீம்ஸில் கூட, ஒரு நடிகராக உங்களை பிடிக்காவிட்டாலும், ஒரு தமிழராக எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டீர்கள் என்பது போன்று ரசிகர்களால் பாராட்டப்பெற்றார்.

ஆனால், விஜய் பேசிய அதே கருத்துக்களை விஜய் டிவியின் பிரபல காமெடி ஷோவான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில், ஒருவர் முன்பே கூறியிருப்பது போன்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இரண்டு பேச்சுக்களையும் இணைத்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#