‘நிச்சயமாக அரசியலுக்கு வருவேன்!’ – வரலட்சுமி சரத்குமார் உறுதி

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐந்து ரூபாய்க்கு எளிய முறையில் நாப்கின் வழங்கும் இயந்திரத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிமுகப்படுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்று நாப்கின்கள் கிடைக்கும் என்றால், ஏழை மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

இளைஞர்கள் எல்லோரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் என்பதை கெட்டவார்த்தை போல் எல்லோரும் பார்க்கின்றனர். அது அப்படி இல்லை.

தற்போது இருக்கும் அரசியல்வாதிகளை அந்த இடத்திற்கு அனுப்பியது நாம் தான். அந்த அதிகாரம் மக்களிடம் தான் இருக்கிறது. தற்போது உள்ள அரசியல் ஒரு காலகட்டத்தில் முடியத்தான் போகிறது. அப்போது அரசியல் மாற்றத்தின் தேவை நிச்சயமாக இருக்கும். அது இளைஞர்களால் முடியும். நான் அரசியலுக்கு வர வேண்டிய காலம் வந்தால் நிச்சயம் வருவேன்” என தெரிவித்தார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.