’கயல்’ சந்திரனின் ’நான் செய்த குறும்பு’…!!!


பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர் சந்திரன். முதல் படம் மாதிரி இல்லாமல் தன்னுடைய நடிப்பை அழகாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்தி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மனதில் இடம் பிடித்தவர். அடுத்தடுத்து பட வாய்ப்பு இல்லாமல் இருந்த சந்திரனுக்கு ‘ரூபாய்’ படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை இவருடைய நடிப்பில் அடுத்து தயாராகி இருக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படமும் இன்னும் வெளியாகமல் இழுத்து அடிப்பதால் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் சந்திரன். இந்நிலையில் மகாவிஷ்ணு இயக்கத்தில் ‘நான் செய்த குறும்பு’ படம் ஆகஸ்ட் 5 ம் தேதி பூஜையுடன் ஆரம்பமாகிறது. இப்படத்தில் சந்ந்திரனும் அவருக்கு ஜோடியாக அஞ்சு குரியனும் நடிக்கிறார்.


இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசும் போது, “ஆடி கார் ஷோரூமில் விற்பனைப் பிரிவில் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் சந்திரனும், சொந்தமாக ஐ.டி. கம்பெனி நடத்தும் கோடீஸ்வர தொழிலதிபராக அஞ்சு குரியன் நடிக்கிறார்”. இப்படம் பெண்களை கொண்டாடும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. பட பூஜை நாளில் ஆதரவற்ற 9 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் கூறினார் இயக்குநர். இப்படத்தை ரைட்டர் இமேஜினேஷன்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் மஹா விஷ்ணுவே தயாரிக்கிறார்.