பிரியங்கா சோப்ரா இந்தியில் தயாராகும் ‘பாரத்’ படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு அவர் ரூ.13 கோடி சம்பளம் வாங்குதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வேறு எந்த இந்திய நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை.
கான் நடிகர்களுக்கு அடுத்த வரிசையில் இருக்கும் கதாநாயகர்கள் ரூ.10 கோடிக்கு குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர். அவர்களை பிரியங்கா சோப்ரா முந்தி இருக்கிறார். தீபிகா படுகோனே சமீபத்தில் வெளியான பத்மாவத் படத்துக்கு ரூ.12 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. இதுவரை முதல் இடத்தில் இருந்த அவர், இப்போது இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளார். கங்கனா ரணாவத் ரூ.11 கோடி சம்பளம் வாங்குகிறார்.
பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்ட நிலையில், குவாண்டிகோ தொடரின் மூலம் உலகளவில் பிரபலமானார். இதன்மூலமே அவரது மார்க்கெட் உயர்ந்தது. பிரியங்கா சோப்ராவுக்கு உலக அளவில் ரசிகர்கள் அதிகரித்துள்ளதால் அவர் கேட்கும் சம்பளத்தை தர தயாரிப்பாளர்களும் தயாராக இருப்பதாக பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்து இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். சமீபத்தில் இருவரும் இந்தியா வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!