பிக்பாஸ் – 2 போட்டியாளர்கள் குறித்து பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா..? ஹாட் டூவீட்ஸ்..!!


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வார இறுதியை எட்டி வருகிறது. போட்டியாளர்களுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக திருடன் போலிஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பிக்பாஸின் அறிவிப்பின் பட பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. இதில் நாட்டாமையாக இருந்து ஜனினி பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்கிறார். பலரும் மாறி மாறி போலிசை குறை கூறிவருகிறார்கள்.

தற்போது பிரபல நடிகையும், கமல் கட்சியில் முக்கிய அங்கம் வகித்து வரும் ஸ்ரீபிரியா பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி மூலம் நித்யாவுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து விட்டது போல் நினைக்கிறேன். ஆரம்பத்தில் இருந்த மும்தாஜ் தற்போது தன் அமைதியை இழந்து காணப்படுகிறார். முதலில் ஆக்ரோஷமாக இருந்த வைஷ்ணவி தற்போது அமைதியாகி வருகிறார். மஹத் அய்யா ரொம்ப சவுண்ட் பார்ட்டியாக இருக்கிறார். . செண்ட்ராயன் ரெம்ப அப்பாவியாக இருக்கிறாரு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!