மீண்டும் மன்மத லீலையில் களம் இறங்கும் சிம்பு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


கடந்த 2004ம் ஆண்டு சிம்பு எழுதி இயக்கி நடித்த மன்மதன் படம் வெளியாகியது. இப்படத்தில் சிம்பு உடன் முதல் முறையாக ஜோதிகா ஜோடி சேர்ந்தார். மந்த்ராபேடி ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டியிருந்தார். சிம்புவின் இளமை துள்ளலான இயக்கமும், யுவனின் இசையும் படத்தை மாபெரும் வெற்றியை பெறச்செய்தது. காதல் வளர்த்தேன் பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது.

பின்பு வல்லவன் படத்தை எழுதி இயக்கி நடித்திருந்தார் சிம்பு. இப்படம் மன்மதன் அளவிற்கு போகவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது. இதையடுத்து படம் இயக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார். பீப் பாடல், ஏஏஏ படம் தோல்வி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை கடந்த சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளது. இதற்கிடையே, கார்த்திக் நரேன் உள்ளிட்ட சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார் சிம்பு. இதற்கிடையில் மன்மதன் இரண்டாம் பாகத்திற்கான முழுக்கதையை முடித்து விட்டார்.

கதை சிம்புவின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக உருவாகி இருப்பதால், தானே அதை இயக்கி, நடித்து தயாரிக்க உள்ளார். இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!