வந்த முதல் நாளே இருட்டறை நாயகியை மிரட்டிய பொன்னம்பலம்..!! எதற்காக தெரியுமா..?


ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 2 நேற்று ஆரம்பமானது. இதில், நடிகை யாஷிகா ஆனாந்த் , பொன்னம்பலம் மற்றும் மஹத் ஆகியோர் முதலில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

மூன்றாவதாக நுழைந்த மஹத் உள்ளே சென்றதும் ரெஸ்ட் ரூம் எங்கே.. ரெஸ்ட் ரூம் எங்கே என தேடிக்கொண்டிருந்தார். அவருடன் பொன்னம்பலமும் தேடிக்கொண்டிருந்தார். அப்போது, நடிகை யாஷிகா ஆனந்த் எங்கள் ரூமில் தான் ரெஸ்ட் ரூம் இருக்கிறது என்று கூறினார்.


பிறகு, பெண்களுக்கான அறையில் புகுந்து கொண்டு இந்த கதவை தாண்ட வேண்டுமானால் டோல் சார்ஜ் கொடுக்க வேண்டும். நான் தான் டோல் கேட் போட்டுருக்கேன் என்று விளையாட்டாக கூறினார். இதனை கேட்ட பொன்னம்பலம், இதோ பாரும்மா..! என்ன பத்தி உனக்கு தெரியாது..? அடிச்சனா.. கதவு எல்லாம் பொளந்துகிட்டு போயிடும் என்றும் நகைச்சுவையாக யாஷிகாவை மிரட்டி கலவரம் செய்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!