நடுராத்திரியில் சாலையில் படுத்துக்கிடக்கும் ஆர்யா..!!! எதனால் தெரியுமா..?


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில், நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடுவதாக கூறி, கடைசிவரை யாரையும் தேர்வு செய்யாததால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில், சைக்கிள் ஓட்டுவதில் மிகவும் ஆர்வமுடையவரான ஆர்யா, தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் 200 கிமீ சைக்கிளிங் சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் சைக்கிள் ஒருபுறம் கிடக்க, அவர் ஒருபுறம் படுத்துக்கொண்டிருப்பது போன்ற படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், அவருக்கு எதோ ஆகிவிட்டதோ என நினைத்து பயந்துள்ளனர். பின்னர், அவர் வேடிக்கையாக அதை செய்துள்ளார் என்பதை அறிந்து அவரை திட்டிவருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!