காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திரையுலகினரின் மவுன போராட்டத்தில் சிம்பு பங்கேற்கவில்லை.
காவிரி பிரச்சனையை இரு மாநில மக்களும் பேசி தீர்க்க வேண்டும் என சிம்பு ஐடியா கொடுத்தார். சிம்புவின் இந்த கருத்துக்கு கர்நாடகாவில் ஆதரவு கிடைத்துள்ளது.
இதனால் சிம்புவை கர்நாடக மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இனிமேல் அவர் படங்களுக்கு அமோக வரவேற்பு கொடுப்போம் என கர்நாடக மக்கள் தெரிவித்துள்ளனர். காவிரி வாரியம் அமைப்பது பற்றி சிம்பு பேசிய வீடியோவை கர்நாடக மக்கள் வைரலாக்கியுள்ளனர்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி