போலீசாருக்கு பாராட்டு, அரசை கேலி செய்யாமல் மக்களுக்கு உதவுங்கள்: கமல்ஹாசன்


நடிகர் கமல்ஹாசன் பருவ மழை குறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

சமீபத்தில் சென்னை எண்ணூர் துறைமுகம் பகுதிக்கு சென்ற கமல் ஹாசன் அங்கு கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் பகுதியை பார்வையிட்டார். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அனல் மின் நிலைய சாம்பல் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் வட சென்னைக்கு மழை வெள் ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என்று கூறினார்.


வெள்ள சேதம் வராமல் தடுப்பது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன், உடனே செயல்பட்டு வரும்முன்னே காக்க வேண்டும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் காவல்துறையினரும் நேரில் சென்று உதவ வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து காவல் துறை உயர் அதிகாரிகளும், போலீ சாரும் வெள்ளப் பகுதி களுக்கு சென்று பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.


போலீசார் மழை வெள்ளத்தில் இறங்கி உதவி செய்யும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல் ஹாசன் காவல் பணியுடன், நிவாரண மீட்பு பணி யிலும் ஈடுபடும் காவல் துறை யினருக்கு நன்றி. நல்ல குடிமகன் சீருடை அணிந் தாலும் அணியாவிட்டாலும் பிரகாசிப்பார் என்று போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

தனது நற்பணி இயக்க தொண்டர்களும் மழை நிவாரண பணியில் ஈடுபட வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-


இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக் கால உதவி செய்யுங்கள். அரசு பணியாளர்களுக்கு இடைஞ்சலோ, கேலியோ இன்றி உதவுங்கள்.ஆபத்துக்கு பாவம் இல்லை.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!