சினிமாவுக்கு “பை-பை” சொல்லும் பிரபல நடிகை..!! வருத்தத்தில் ரசிகர்கள்..!!


தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் 2003-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் அறிமுகமானார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமானார். மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், தோரணை, குட்டி, ரவுத்திரம் ஆகியவை ஸ்ரேயாவின் முக்கிய படங்கள். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

தற்போது தமிழில் அரவிந்த் சாமியுடன் நரகாசுரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கும் ரஷியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆண்ட்ரேவ் கோஷ்சேவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.


இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரேயாவுக்கு வேறு புதிய படங்கள் எதுவும் இல்லை.

திருமணம் ஆனதால் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். ஏற்கனவே வெங்கடேஷ் ஜோடியாக புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்க ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். திருமணத்தை காரணம் காட்டி அந்த படத்தில் இருந்து ஸ்ரேயாவை நீக்கி விட்டு வேறு கதாநாயகி தேடுகிறார்கள்.

இதனால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் ரஷியாவில் குடியேற ஸ்ரேயா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ரஷியாவுக்கு குடிபெயற தயாராகி வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி